இயற்கை வைத்தியம்
உடலுக்கு நலம் தரும் நாட்டு சர்க்கரை...!
கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும்.
நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.
எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Is it possible to send by courier 3kg
ReplyDelete